பதிவு:2025-01-08 11:41:46
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் 11 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 366 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 79 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 36 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 56 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 75 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 120 மனுக்களும் என மொத்தம் 366 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
பின்னர், தாட்கோ மூலம் 11 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன்(பொது), தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி , தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அரிஷ்குமார், மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.