திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2025-01-08 11:56:57



திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜன 08 : திருவள்ளூர் மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழிற் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக சனவரி 2025 முதல் 28.02.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000 RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.02.2025. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் தொலைபேசி எண்: 044-22501006, மின்னஞ்சல் : detischennai@gmail.com மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.