பதிவு:2025-01-21 11:56:10
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 354 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 354 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 133 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 55 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 58 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 36 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 72 மனுக்களும் என மொத்தம் 354 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் (பொது),சத்தியபிரசாத் (தேர்தல்) தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆ.கற்பகம், (திருவள்ளூர்), க.தீபா (திருத்தணி), தனித்துணை ஆட்சியர் (நிலம்) செல்வராணி, மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.