ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2025-01-24 12:37:34



ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜன 24 : தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப்பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 31.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த ஐ.டி.ஐ பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்குபெற உள்ளன.

இம்முகாமில் NCVT/SCVT முறையில் கல்வி பயின்ற பயிற்சியாளர்கள் இதுநாள்வரை தொழிற்பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.

மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9444224363, 9486939263 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.