பதிவு:2025-01-28 12:43:06
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நவீன தையல் இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 471 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 124 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 72 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 57 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 170 மனுக்களும் என மொத்தம் 471 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பின்னர், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பம் மனு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் வழங்கிய சில நிமிடங்களில் மாவட்ட சுற்றுச்சூழல் துறை சார்பாக ஏற்பாடு செய்து மாற்றுத்திறனாளி பயனாளிக்கு தலா ரூ.20000 மதிப்பிலான நவீன தையல் இயந்திரத்தை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆ.கற்பகம், (திருவள்ளுர்) க.தீபா (திருத்தணி) மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.