பதிவு:2022-06-11 12:10:17
அம்பத்தூரில் வரும் 13 ம் தேதி ஐடிஐ,பொறியியல் மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் சேர்க்கைக்கான முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூன் 11 : திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் அம்பத்தூர் அரசு ஐடிஐ வளாகத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள், பாலிடெக்னிக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் சேர்க்கைக்கான முகாம் வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகாம் அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பல்வேறு தொழிற்பிரிவு களை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு மத்திய,மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகின்றது.
மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் அவர்களை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 9444224363 மற்றும் 9444139373, 9444665884 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.