பதிவு:2025-02-04 13:16:49
Bad girl திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம் அந்தப் படத்தை பாராட்டும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் ரஞ்சித் ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி :
திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் இருந்த பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ண ஸ்ரீ சந்தான விநாயகர் கோயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கடந்த மாதம் 27ம் தேதி கோவிலை கோவிலில் இடித்து தரைமட்டமாக்கினர்.
இதற்கு புல்லரம்பாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கதறி அழுதனர். இந்நிலையில் கோவில் இடிக்கப்பட்ட இடத்தின் அருகே 1 சென்ட் பட்டா நிலத்தை வாங்கி ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ண ஸ்ரீ சந்தான விநாயகர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், புல்லரம்பாக்கம் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், கடந்த ஒரு வருட காலமாக கோவில் அருகே தனியார் ஆக்கிரமிப்பு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை இணைந்து செயல்பட்டு தற்பொழுது அரசாங்கத்தால் ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றப்பட்டது. தமிழக முழுக்க இந்து அறநிலையத்துறை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை வருமானம் உள்ள கோயில்களை மட்டும் தான் நிர்வாகம் செய்கிறது. பொது மக்களே பல இடங்களில் வழிபாட்டுக்காக இத்தகைய கோயில்களை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோயில்களில் ஆக்கிரமிப்பு என்று சொல்லி அதை அகற்றுகின்ற பொழுது அறநிலையத்துறை மௌனம் சாதிக்கிறது.
தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாள் இன்று அவர் நாத்திக கொள்கையை கடைப்பிடித்தவர். அவருடைய பிறந்த நாளை இன்று திமுக அதிமுகவினர் கட்சி அலுவலகத்தில் அன்னதானம் வழங்கலாம். ஆனால் கோவில்களில் ஒருவரின் நினைவு நாளை சமபந்தி போஜனம் நடத்துவது பக்தர்களின் மனதை புண்படுத்தும். அண்ணாதுரை நாத்திக கொள்கையை பின்பற்றியவர் அவர் ஆழ்வாரும் நாயன்மார்களும் கிடையாது என தெரிவித்தார். நாட்டு நடுத்தர மக்கள் மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய மிடில் கிளாஸ் மாதவன் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளனர் அதற்கு வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பேட் கேர்ள் திரைப்படம் பள்ளிக்கு வரக்கூடிய சிறுமி காமத்தில் ஈடுபடுவது காதலில் ஈடுபடுவது இதை தட்டிக் கேட்கும் பெற்றோருக்கு தற்கொலை மிரட்டல் விடுப்பது தமிழ்நாட்டில் ஏற்கனவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் சீண்டல் பாலியல் தொந்தரவு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் யார் அந்த சார் இப்போது யார் அந்த கார் இந்த நிலைமை உள்ளது இந்த நிலையில் இந்த பேட் கேர்ள் திரைப்படம் ரஞ்சித் இந்தப் படத்தை பாராட்டுகிறார்கள் பெண்களுக்கு கட்டற்ற பாலியல் சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள் பள்ளியில் குழந்தைகளை படிக்க அனுப்புகிறோமா எதற்காக அனுப்புகிறோமா இவர்களை எல்லாம் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பெண் சிறுமிகளை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கக் கூடிய வகையில் அவமானப் படுத்தும்.
உங்கள் வீட்டு குழந்தைகள் சிறுமிகள் பேட்கேளாக இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா விஜய் சேதுபதி. வெற்றிமாறன். ரஞ்சித்தையும் கேட்கிறேன் சேரன் திரைப்பட இயக்குனர் இது போன்று மாட்டிக்கொண்டார் எல்லோரும் போய் காலில் விழுந்து விடுவித்தார்கள் நமது வீட்டு பெண் என்றால் சும்மா இருப்போமா யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் வைத்துக் கொள்ளலாம் இதுதான் பெண் சுதந்திரமா இதை மையமாக வைத்து அதுவும் பிராமண சமூக குழந்தைகளை குறிவைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது அந்தப் படத்தின் டீசரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளோம் அதை தடை செய்ய வேண்டும் திரைப்படம் தவறான முன்னுதாரணம் இதை தணிக்கை துறை நீதி துறைக்கு முறையிட்டுள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்