பதிவு:2025-04-12 11:26:39
திருவள்ளூரில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் ஏப் 12 : திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 02 நபர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், உதவி திட்ட அலுவலர் சீனிவாசன் , செயற்பொறியாளர் ராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.