திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்வு :

பதிவு:2025-04-19 10:54:26



திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்வு :

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்வு :

திருவள்ளூர் ஏப் 19 : கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 42 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கமாகும். அதன்படி கடந்த ஏப்.13 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

இயேசுவானவர் கடைசியாக சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்து கல்லறையில் வைக்கப்படுகிற நாளை தான் புனித வெள்ளி என்று கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த புனித வெள்ளி தினத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சி எஸ் ஐ , வெற்றி சிலுவை ஆலயம், கௌடி ஆலயம், அற்புத ஜெப கோபுரம், ஏ.ஜி தேவாலயம், டி இ.எல் சி. உட்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி திருவள்ளூர் அருகே மணவாளநகர் அற்புத ஜெபகோபுர ஏ ஜி தேவாலயத்தில் தலைமை போதகர் ஜெ.செல்லதுரை தலைமையில் புனித வெள்ளி கொண்டாடப்பட்டது புனித வெள்ளி சிறப்பு பிராத்தனை மற்றும் திருப்பலி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது, சிலுவையில் இயேசு நாதர் அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகளை கிறிஸ்தவர்கள் தியானம் செய்தனர்.

அப்போது இயேசு கிறிஸ்து எப்படி சிலுவையில் அறையப்பட்டார் என்பதை குறித்து தத்துரூபமாக சபை விசுவாசிகள் நடித்துக் காட்டினார்கள் இதை பார்க்கும் பொழுது இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார் புனித வெள்ளி என்பது மன்னிப்பது என்றும் ஒருவருக்கொருவர் மன்னித்து சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், புட்லூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பூண்டி, உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.