பதிவு:2022-06-11 12:41:19
வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூன் 12 : தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் “வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-2022 -ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளை நிலங்களில்லேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன, தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் ரூ.8 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவிகிதம் மானிய அடிப்படையில் அதிக்பபட்சமாக ரூ.4.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.
மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பின்னர் சம்மந்தபட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையினை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர்(வே.பொ.) அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு செயற் பொறியாளர்(வே.பொ.) என்.ஜி.ஜி.ஓ. காலனி, பெரியகுப்பம், திருவள்ளூர்,தொலைபேசி - 044-27663843, உதவி செயற் பொறியாளர்(வே.பொ.) திருவள்ளூர், செல் - 9443957921
உதவி செயற் பொறியாளர்(வே.பொ.) திருத்தணி மற்றும் பொன்னேரி, செல் - 9789597447 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.