தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-05-28 11:45:48



தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

தொழிற்பயிற்சி  நிலையங்களில் (ஐடிஐ)  மாணவர்கள்  சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மே 28 : 2025-26 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், விண்ணப்பமானது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் திருவள்ளூர் மாவட்ட முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அம்பத்தூர் (ஆடவர் மற்றும் மகளிர்), கும்மிடிப்பூண்டி மற்றும் வடகரை.திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், திருவள்ளூர். (9486939263, 9444139373) ஆகிய 6 சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண தொகை ரூ. 50 விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / G-pay வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 13.06.2025 கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் அதன் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.