விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவை தொகை தமிழ்நாடு அரசால் விடுவிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-05-28 11:47:46



விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவை தொகை தமிழ்நாடு அரசால் விடுவிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவை தொகை தமிழ்நாடு அரசால் விடுவிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மே 28 : திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-25 ம் ஆண்டு அரைவைப்பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு அரசு அறிவித்திருந்த கரும்பு விலையில் 14.67 கோடி தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. நிலுவை கரும்பு தொகையை வழங்கிடுமாறு ஆலை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிற்வாகத்தினை கரும்பு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை உள்ள தமிழ்நாடு அரசு, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து நிலுவை கரும்பு கிரையத் தொகையினை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழி வகை கடனாக ரூ.14.67 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு, இத்தொகை 1527 கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஆலை நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் புதியதாக கரும்பு நடவு செய்வதில் பெரு வாரியான விவசாயிகள் தற்பொழுது ஆர்வம் காட்டி வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.