குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்த 80 வாகனங்கள் : அபராதத் தொகையை மீட்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-05-28 11:49:11



குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்த 80 வாகனங்கள் : அபராதத் தொகையை மீட்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்த 80 வாகனங்கள் :  அபராதத் தொகையை மீட்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மே 28 : திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது பொது விநியோகத் திட்ட பொருட்களுடன் கூடிய வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் 6A விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைப்பற்றுகை செய்யப்பட்ட பொது விநியோகத் திட்ட பொருட்கள் முழுவதும் அரசுக்கு ஆதாயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வழக்குகளில் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு மதிப்பீடு நிர்ணயம் செய்து பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு குடிமைப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு கடத்தி சென்ற குற்றத்திற்காக கீழ்கண்ட 80 வாகனங்களுக்கு அபராதம் விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வாகன உரிமையாளர்கள் இதுவரை செலுத்தி வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை.

மேலும் இந்த வாகனங்களுக்கு இது நாள் வரை யாரும் உரிமைக்கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை. ஆகையால் மேற்படி வாகனங்களை MSTC E-commerce நிறுவனத்தின் மூலம் 28.03.2025, 28.04.2025, 05.05.2025 மற்றும் 15.05.2025 ஆகிய தேதிகளில் மின்னணு ஏலமிடப்பட்டது. ஆனால் ஏலம் நிர்ணயித்த தொகையை விட குறைவாக ஏலத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டதால் ஏலம் நிராகரிக்கப்பட்டது.

எனவே வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை 29.05.2025-க்குள் செலுத்தி அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்ல வில்லை எனில் வாகனங்களை உரிமை கோரப்படாத வாகனங்களாக கருதி அரசுக்கு ஆதாயம் செய்து திருவள்ளூர் சரகம் குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடர்புடைய இரண்டு சக்கரம், மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 70 வாகனங்களை 30.05.2025 அன்று காலை 10.00 மணியளவில் காவல் ஆய்வாளர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை, திருவள்ளூர் சரக அலுவலகம், பூங்கா நகர், ஸ்ரீ நிகேதன் பள்ளி அருகிலும், சென்னை சரகம் குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடர்புடைய இரண்டு சக்கரம், மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 10 வாகனங்களை 31.05.2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை, சூரப்பட்டு, வேலாம்மாள் பள்ளி எதிரிலும் பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் தெரிவித்துள்ளார்.