பதிவு:2025-05-29 11:47:44
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் மே 29 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் .பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட வேலஞ்சேரி ரெட்டி மோட்டூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் (23-24) கீழ் வேளாண் சாகுபடி, தேன் கூடு வளர்த்தல், குஞ்சு பொறிக்கும் இயந்திரம் ஆகிய வேளாண் திட்ட பணிகளை பார்வையிட்டு இங்கே விளையும் பொருட்களை இங்கேயே சந்தைப்படுத்துவது மட்டுமில்லாமல் வெளியே கொண்டு பொருட்களை சந்தை படுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களே கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் மூலம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களே தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆய்வு மேற்கொண்டு பத்தாம் வகுப்பு முடித்த மாணவிகள் பள்ளி சேர்க்கையினை பார்வையிட்டார். அதே பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 1.41 கோடி மதிப்பில் 6 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலருக்கு அறிவுறுத்தினர்.
மத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் சொட்டுநீர் பாசன முறையில் டிராகன் பழம் மற்றும் பல்வேறு பழச்செடிகளை சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை பார்வையிட்டு பழங்களை சந்தைப்படுத்தல் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். கொத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படுத்தப்படும் மருத்துவ பணிகள், மருத்துவர், பணியாளர்கள் வருகை பதிவேடு , மருந்தகம் , பிரசவ அறை ஆகியவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொல்லாலகுப்பம் இருளர் குடியிருப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் PM JANMAN திட்டத்தில் பயனாளி வீடு கட்டும் திட்டப்பணிகளையும், திருத்தணி நகராட்சி பகுதியில் NHM திட்டத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நகர் நல வாழ்வு மையம் கட்டடம் கட்டுவதற்கான பணிகளையும், தெக்கலூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் NH205 - தெக்கலூர் வரை (4.9 கி.மீ வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும், வீரகநல்லூர் ஊராட்சியில் AGMT- II (22 +23) திட்டத்தில் நர்சரி நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், சின்ன கடம்பூர் - கார்த்திகேயபுரம் வரை 6 கி.மீ சாலை பணிகள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், ஊரக மற்றும் நகராட்சி பகுதிகளில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆட்சியர் பார்வையிட உள்ளார்.
இதில் தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், வேளாண்மை இணை இயக்குநர் கலா தேவி, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் வி.ஆர்.கோமதி, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.