பதிவு:2025-05-29 11:49:55
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்கள் ஒரு சிலருக்கு உடனடி பட்டா :
திருவள்ளூர் மே 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1434 ஆம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும் கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் வருவாய் தீர்வாய் அலுவலர்கள் நிர்ணயம் செய்தும் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 12 நாட்கள் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சி 20-ஆம் தேதி தொடங்கியது.
அதன்படி 6-ஆவது நாள் நிகழ்ச்சியில் திருவூர், கோயில் குப்பம், பெருமாள் பட்டு, பாக்கம், நத்தமேடு, புலியூர், அயத்தூர், 25 வேப்பம்பட்டு, 26 வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, சிறு கடல், தொட்டிகலை, சிறுகளத்தூர், புன்னப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டி. ஸ்ரீராம் தலைமை தாங்கினார்.
இதில் திருவள்ளூர் வட்டாட்சியர் ந.ரஜினிகாந்த் வட்டாட்சியர் (தேர்தல்) சிவகுமார், தனி வட்டாட்சியர் (சபாதி) பரமசிவம், வட்ட தலைமை நில அளவர் தனசேகர், மண்டல துணை வட்டாட்சியர்கள் தினேஷ், கலைச்செல்வி, நரசிம்மன், திருவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் இளங்கோவன்,கிராம நிர்வாக அலுவலர்கள் பெருமாள்பட்டு கிருஷ்ணன், கோவில்குப்பம் செல்வகுமார் செவ்வாபேட்டை ராதிகா, புலியூர் ராஜலட்சுமி, திருவூர் சூர்யா, பாக்கம் - நத்தம்பேடு பானு, நில அளவர்கள் ராஜசேகரன், ஸ்ரீதர், நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் திருவள்ளூர் தாலுக்கா ஜமாபந்தி அலுவலரும், கலெக்டரின் (தேர்தல்) நேர்முக உதவியாளருமான ஸ்ரீதர் மனு கொடுத்த பாக்கம் மற்றும் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மற்றும், முழு புல பட்டாவை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கினார்.