திருவள்ளூர் நகராட்சியில் அதிக வெளிச்சம் அளிக்கும் தெரு விளக்குகள் பொருத்த வேண்டும் : நகர்மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தல் :

பதிவு:2025-05-29 11:51:52



திருவள்ளூர் நகராட்சியில் அதிக வெளிச்சம் அளிக்கும் தெரு விளக்குகள் பொருத்த வேண்டும் : நகர்மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தல் :

திருவள்ளூர் நகராட்சியில் அதிக வெளிச்சம் அளிக்கும் தெரு விளக்குகள் பொருத்த வேண்டும் : நகர்மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தல் :

திருவள்ளூர் மே 29 : திருவள்ளூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் வார்டு உறுப்பினர்கள் நகர் மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் நகர்மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் ந.தாமோதரன் முன்னிலை வகித்தனர். அப்போது, அதிகாரிகளுக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

அப்போது, நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், வெளிச்சம் குறைந்தவையாக உள்ளதை மாற்றி, அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்தவும் 11 ஆவது வார்டு உறுப்பினர் ஜான் குறிப்பிட்டார். அதேபோல் நகராட்சியில் வருவாய் துறையினர் வரி வசூலில் மட்டும் ஈடுபடுகின்றனர்.

இதேபோல் வீட்டு வரி விதித்தல், காலிமனை வரி, நில அளவீடு, கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல் போன்ற பணிகள் தாமதம் ஆகிறது. மேலும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வார்டு உறுப்பினர் தாமஸ் என்ற ராஜ்குமார் புகார் தெரிவித்தார். அதேபோல், தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதே விட்டு விடுகின்றனர். இதனால் நோய் தொற்றால் பாதிப்பதை தடுக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். அதேபோல் கழிவு கால்வாய்கள் மேடாக உள்ளதால், மழைக்காலத்திற்கு முன்னதாக தூர்வார வேண்டும் எனவும் என வலியுறுத்தினர்.

அப்போது, நகர்மன்ற தலைவர் பதில் அளித்து பேசுகையில், இந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நகர்மன்ற வார்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வரவு, செலவு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சுகாதார அலுவலர் மோகன், நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் அருணா ஜெயகிருஷ்ணா, அயூப் அலி, பிரபாகரன், சாந்தி கோபி, கந்தசாமி, சுமித்ரா வெங்கேடசன், வசந்தி வேலாயுதம் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.