திருவள்ளூர் நகராட்சி புதிய ஆணையாளராக ந.தாமோதரன் பொறுப்பேற்பு :

பதிவு:2025-05-29 11:53:27



திருவள்ளூர் நகராட்சி புதிய ஆணையாளராக ந.தாமோதரன் பொறுப்பேற்பு :

திருவள்ளூர் நகராட்சி புதிய ஆணையாளராக ந.தாமோதரன் பொறுப்பேற்பு :

திருவள்ளூர் மே 29 : திருவள்ளூர் நகராட்சி ஆணையாளராக ந.தாமோதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதற்கு முன்னதாக திருவள்ளூர் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் பதவி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து திருவேற்காடு நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த தட்சணாமூர்த்திக்கு திருவள்ளூர் நகராட்சி ஆணையாளர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த ந.தாமோதரன், திருவள்ளூர் நகராட்சி ஆணையாளராக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதிய ஆணையாளராக தாமோதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதிய ஆணையாளருக்கு நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் மோகன், நகர்மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.