திருவள்ளூரில் 12-வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் காலை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி தனியார் மருத்துவமனை முற்றுகை :

பதிவு:2025-06-02 12:13:33



திருவள்ளூரில் 12-வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் காலை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி தனியார் மருத்துவமனை முற்றுகை :

திருவள்ளூரில் 12-வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் காலை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி தனியார் மருத்துவமனை முற்றுகை :

திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியின் 12 வயது மகன் கிஷோர்.இவன் கடந்த 12-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கால் உடைந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்த நிலையில் அதனையும் இங்கு செய்தால் சரியாகாது நீங்கள் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள சன் சைன் என்ற தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள். குறைந்த செலவில் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்கிறேன் என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் முரளி மனோஜ் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து சன் சைன் மருத்துவமனையில் இருந்த டாக்டர் பிரபு என்பவர் பாதிக்கப்பட்ட தரப்பிடம் பேரம் பேசி 80 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சைக்கு செலவாகும். முதலில் 20 ஆயிரம் கட்டுங்கள். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மீதமுள்ள 60 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என உத்தரவாதம் பெற்றுள்ளார்.பின்னர் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை முடிந்த பின் சிறுவனின் கால் கொஞ்சம் கொஞ்சமாக வீங்க ஆரம்பித்ததுடன் கருப்பாக மாறியுள்ளது. இதை அறிந்த சிறுவன் கிஷோரின் தந்தை மருத்துவரிடம் கேட்டபோது இதனை இங்கு சரி செய்ய முடியாது. நீங்கள் மீண்டும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். ஆனால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அல்லது சவீதா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து நேரடியாக பூந்தமல்லி சவீதா மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அப்போது சிறுவனை பயிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததால் ரத்த ஓட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் காலை எடுக்க வேண்டும் இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்து பெற்றோர்களிடம் கால் எடுப்பதற்கு கையெழுத்து பெற்றுள்ளனர்.தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு வாரத்திற்கு பின்னர் சிறுவனின் காலை அகற்றினர்.

இதனால் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தற்பொழுது ஒரு கால் இல்லாமல் இருப்பது பரிதாபத்தின் உச்சமாக உள்ளது இதனையடுத்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனையை காலை இழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனை கொடுக்கும் கமிஷனுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளாமல் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விசாரித்தபோது, அறுவை சிகிச்சை தவறாக நடைபெறவில்லை. சிகிச்சைக்காக சிறுவன் சேர்க்கப்பட்ட போது ஆபத்தான நிலையில் வந்ததாக சன் சைன் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.