ஆவடியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினர் :

பதிவு:2025-06-03 14:13:57



ஆவடியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினர் :

ஆவடியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினர் :

திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.அப்பொழுது அமைச்சர் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவல்லிக்கேணி வெலிங்டன் லேடிமேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பள்ளி திறக்கும் நாள் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2025-26 கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் சேர வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் தொடங்கி வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நமது திருவள்ளூர் மாவட்டத்தில் 984 தொடக்கப் பள்ளிகள் 257 நடுநிலைப் பள்ளிகள் 130 உயர்நிலைப் பள்ளிகள் 119 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1490 பள்ளிகளில் 1,91,950 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.. இவர்கள் அனைவருக்கும் இன்றைய தினம் 2025-2026 கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும். மேலும் மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை கவனித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு .நாசர் தெரிவித்தார்கள்

தொடர்ந்து திருமுல்லைவாயில் உள்ள அராபத் ஏரியை சீரமைத்து பசுமை பூங்காவாக உருவாக்கும் வகையில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) பவானி, ஆவடி வட்டாட்சியர் காயத்ரி, தலைமையாசிரியர் கலியபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.