பதிவு:2025-06-03 14:17:33
திருப்பாலைவனம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 43 இலட்சம் மதிப்புள்ள சமுதாயக் கூடத்தின் சாவி மற்றும் ஆணை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 374 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 118 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 66 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 63 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 35 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 92 மனுக்களும் என மொத்தம் 374 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் -பூண்டி குறுவட்டம், எண்.12.அரும்பாக்கம் கிராமத்தை சார்ந்த.சஞ்சீவி 19.08.2020 அன்று பூண்டி நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து இறந்தமைக்காக அவரது வாரிசுதாரரும் தாயார் அமுல் என்பவரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 க்கான காசோலையினையும், அதேபோல் திருத்தணி வட்டம் - திருவலாங்காடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் (6) 07.01.2022 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய தாயார் அமுதா விடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைத்த திருப்பாலைவனம் ஊராட்சி செஞ்சி அம்மன் நகரில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்ட 43 இலட்சம் மதிப்புள்ள சமுதாயக் கூடத்தை சமுதாயக் கூடத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சுய உதவிக் குழுவினரிடம் சமுதாய நலக்கூடத்தின் சாவி மற்றும் ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையர் கலால் கணேசன், வருவாய் கோட்ட ஆட்சியர் திருத்தணி கனிமொழி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர்கள் உஷா ராணி , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வராணி. தாட்கோ மேலாளர் சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.