பதிவு:2025-06-03 14:20:12
செம்பரம்பாக்கம் ஊராட்சி பாப்பான் சத்திரம் கிராமம் கோவில் பயன்பாட்டில் இருந்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர் :
திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் செம்பரம்பாக்கம் ஊராட்சி பாப்பான் சத்திரம் கிராமம் கோவில் பயன்பாட்டில் இருந்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர் அதில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பாப்பான் சத்திரம் கிராமத்தில் காசி விசுவநாத சுவாமி, வேணுகோபால சுவாமி, ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில், வர சித்தி விநாயகர் திருக்கோவில் போன்ற ஆலயங்கள் அமைந்துள்ளது.
இந்த திருக்கோவிலுக்காக பயன்படுத்தி வந்த காலி இடத்தினை பாஸ்கர் மற்றும் நந்தினி ஆகியோர் ஆக்கிரமித்தனர். மேலும் இவர்களுக்கு துணையாக ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட்டும் இந்த காலி மனையில் வீடு உள்ளதாகவும், வீடே இல்லாத வீட்டில் பாஸ்கர் மற்றும் நந்தினி ஆகியோர் குடும்பமாக வசித்து வந்ததாக அவர்களுக்கு வீட்டு வரி ரசீதும் கொடுக்கப்பட்டுள்ளது.இது போன்ற ஆவணங்களை தயார் செய்து ஊர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைமுகமாக நீதிமன்றத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக எதிர் தரப்பினர் யாரும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆணை பெற்றுள்ளனர்.தற்போது ஊர் பொதுமக்கள் ஆகிய நாங்கள் நீதிமன்றத்தில் அவர்கள் பெற்ற ஆணையினை எதிர்த்து அதனை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ளோம்.
ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பாப்பான் சத்திரம் கிராம பொதுமக்களை விசாரணை செய்து குறிப்பிட்ட இடம் கோவில் சம்பந்தமாகவும் ஒரு பொது வேலைக்காகவும் தான் பயன்படுத்தப்படுகிறது என்றும், அந்த இடம் கிராம நத்தம் காலி மனை என்றும், அவர் கைப்பட கடிதம் அளித்துள்ளார்.ஆகவே கிராம மக்கள் தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த இடத்தை மீட்டுத் தரும்படி, தாங்கள் ஊர் பொதுமக்களிடம் விசாரணை செய்து குறிப்பிட்ட இடம் பொதுமக்கள் பயன்பாட்டில் தான் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தி சான்று அளிக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.