கிராமணி மக்கள் வாழ்வுரிமை நல சங்கம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட மயான பூமி மீட்டுத் தரக் கோரி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு :

பதிவு:2025-06-03 14:22:25



கிராமணி மக்கள் வாழ்வுரிமை நல சங்கம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட மயான பூமி மீட்டுத் தரக் கோரி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு :

கிராமணி மக்கள் வாழ்வுரிமை நல சங்கம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட மயான பூமி மீட்டுத் தரக் கோரி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு :

திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமணி மக்கள் வாழ்வுரிமை நல சங்கம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட மயான பூமி மீட்டுத் தரக் கோரி கோரி கிராமணி மக்கள் வாழ்வுரிமை நல சங்க தலைவர் பச்சையப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கிராமணி சமூகத்திற்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சேக்காடு கிராமம் விளஞ்சியம்பாக்கம் பகுதியில் சர்வே எண் 166 இன் படி33 சென்ட் மயான பூமி உள்ளது.இந்த இடம் தமிழ்நாடு அரசு 1998 ம் ஆண்டு சொர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி ரூ.1.95 லட்சம் ஒதுக்கி வேலி அமைத்து தந்தது.இந்நிலையில் சுமார் 30 வருடங்கள் கடந்த நிலையில் இவ்விடத்தில் சிலர் கடந்த ஆண்டுகளாக மயான பூமியை ஆக்கிரமித்து பெயர் பலகை அமைத்து வழி பாதை அமைத்து விட்டனர்.

இதனால் மயான பூமி சுற்றளவு குறைந்துள்ளது.எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் சரியான அளவு படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயான பூமி மீட்டுத் தந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படிஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்தமனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.