உளுந்தை ஊராட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் அரசு பள்ளியில் அதிநவீன கூடுதல் பள்ளி கட்டிடத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் திறந்து வைத்தார் :

பதிவு:2025-06-03 14:24:57



உளுந்தை ஊராட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் அரசு பள்ளியில் அதிநவீன கூடுதல் பள்ளி கட்டிடத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் திறந்து வைத்தார் :

உளுந்தை ஊராட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக  ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் அரசு பள்ளியில் அதிநவீன கூடுதல் பள்ளி கட்டிடத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் திறந்து வைத்தார் :

திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அப்பள்ளியின் முன்னாள் மாணவருமான ரமேஷ்,அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என தனிக்கவனம் செலுத்தி அவரது சொந்த செலவில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள், ஏசி, மின்விசிறி, ஆரோ வாட்டர் சிறந்த இசையுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு வசதி பள்ளி வளாகத்தில் 23 சிசிடிவி கேமராக்களுடன் கூடிய அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை‌ மாணவர்களின் பயன்பாட்டுக்காக ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் எந்த ஒரு அரசு பள்ளியிலும் இதுபோன்ற குளிரூட்டப்பட்ட வகுப்பறை, கண்காணிப்பு கேமரா, நவீன ஸ்மார்ட் வகுப்புகள் உடன் துவக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் பள்ளிகள் திறக்கும் நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை சண்டி மேள தாளத்துடன் பள்ளி ஆசிரியர்கள்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா பூ, இனிப்புகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.உளுந்தை ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அவர்களின் இந்த பணியை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் வெகுவாக வரவேற்றனர்.