திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளக்கரை தெருவில் வழிந்தோடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் விரைந்து. நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை :

பதிவு:2025-06-03 14:27:18



திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளக்கரை தெருவில் வழிந்தோடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் விரைந்து. நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை :

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளக்கரை தெருவில் வழிந்தோடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் விரைந்து. நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை :

திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் வீரராகவர் கோயில் அருகே குளக்கரை தெருவில் வணிக கடைகள் அதிகம் உள்ளன. கோயிலுக்கும் வரும் பக்தர்கள் மட்டுமின்றி திருவள்ளூர் நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் அந்த குளக்கரை சாலையில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி தாழ்வான பகுதியில் வழிந்தோடுகிறது .

இதனால் ஆங்காங்கே தேங்கியும் நிற்கிறது. இந்த குளக்கரை சாலையில் மாம்பழம் போன்ற உணவுப் பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரை கட்டுப்படுத்த வேண்டும். கழி்வு நீர் தொட்டியில் இருந்து வெளியேறாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அனைவரும் இந்த கழிவு நீரை சுவாசித்தபடியே செல்ல வேண்டி இருப்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.