பதிவு:2025-06-03 14:30:14
அசாம் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது :
திருவள்ளூர் ஜூன் 04 : அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை திருமணம் செய்த இளைஞரை திருவள்ளூர் அருகே மப்பேடு காவல் நிலைய போலீஸôர் உதவியுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி அழைத்துச் சென்றனர். அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜிஜூல் பக்ஸ் (எ) பப்லு(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து அங்கிருந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அசாம் மாநில போலீஸில் புகார் செய்தனர். அதன் பேரில் அசாம் மாநில போலீஸôர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கைப்பேசி கோபுரம் மூலம் ஆய்வு செய்த போது அவர்கள் தமிழகத்தில் திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அசாம் மாநில போலீசார், மப்பேடு காவல் நிலைய போலீசார் உதவியுடன் இருவரையும் மீட்டனர். இதையடுத்து போலீஸôர் அவர்களை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜார்படுத்திய பின், அந்த இளைஞரை அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.