பதிவு:2025-06-03 14:34:33
மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் சார்ந்த பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகள், நடமாடும் சிகிச்சை வாகனம் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஜூன் 04 : உலக வங்கி நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் சார்ந்த பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகள், நடமாடும் சிகிச்சை வாகனம் மூலமாகவும் வழங்கும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் 19 இடங்களில் ஓரிட சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அமர் சேவா சங்கம் தொண்டு நிறுவனம் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 முன்களப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, மாவட்டம் முழுவதும் ஜூன் 2 முதல் வீடு வீடாகச் சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்ய உள்ளனர்.
இதற்கு மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, போன்ற ஆவணங்களும் சரிபார்ப்பதற்காக முன்களப்பணியார்கள் கேட்டால் அதனை காண்பிக்கவும், மாற்றுத்திறனாளிகள் அல்லாத வீடுகளில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் மட்டும் வழங்கவும் வேண்டும் கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலும் 044-27662985 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.