குடும்ப தகராறு காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உறவினர்கள் இரண்டு பேர் கைது : 3 பேருக்கு வலை வீச்சு :

பதிவு:2025-07-17 21:50:14



குடும்ப தகராறு காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உறவினர்கள் இரண்டு பேர் கைது : 3 பேருக்கு வலை வீச்சு :

குடும்ப தகராறு காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உறவினர்கள் இரண்டு பேர் கைது : 3 பேருக்கு வலை வீச்சு :

திருவள்ளூர் ஜூலை 17 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அருகே உள்ள கீழச்சேரி ஜார்ஜ் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (38).இவர் மஞ்சுளா (37) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு குழந்தை கிடையாது. இந்த நிலையில் கடந்த 15.5.2025 அன்று உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டீபன்ராஜ் உயிரிழந்தார்.

இந்த நிலையில் திருமணமான நாளில் இருந்து மஞ்சுளாவின் மாமனார், மாமியார் உட்பட உறவினர்கள் என 5 பேர் அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ஸ்டீபன்ராஜ் இறந்ததற்கும் மஞ்சுளா தான் காரணம் என அவரது மாமனார், மாமியார் உறவினர்கள் அவரை அடிக்கடி கூறி சண்டை பிடித்து வந்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த மஞ்சுளா நேற்று முன்தினம் தன் அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் தன் சாவுக்கு காரணமான மாமனார், மாமியார் உறவினர்கள் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மஞ்சுளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அந்த கடிதத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக மஞ்சுளாவின் மாமனார், மாமியார்,உறவினர்கள் என 5 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மஞ்சுளாவின் உறவினர்களான கீழச்சேரி பகுதியை சேர்ந்த உறவினர்களான பால்ராஜ் (50) ராணி(45) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.