பாண்டூர் டி.இ.எல்.சி பள்ளியில் குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரை வழங்கினார் :

பதிவு:2025-08-13 11:34:59



பாண்டூர் டி.இ.எல்.சி பள்ளியில் குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரை வழங்கினார் :

பாண்டூர் டி.இ.எல்.சி பள்ளியில் குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரை வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம் பாண்டூர் டி.இ.எல்.சி அரசு உதவிபெறும் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மாணவ மாணவிகளுடன் குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரை உட்கொண்டார்.

குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, இரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள்.11.08.2025 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 18.08.2025 குடற்புழு நீக்கத்திற்காக அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் பள்ளி செல்லாத 1 முதல் 19 வயது வரை அனைத்து குழந்தைகள் 20 – 30 வயதுடைய பெண்கள் (கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர), அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும், பள்ளியில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் அல்பெண்டசோல் மாத்திரை கீழ்காணும் விகிதத்தின் படி மையத்தில் வழங்கப்படும்.

1 முதல் 2 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு - அல்பெண்டசோல் 1/2 மாத்திரை (200அப) 2 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு -அல்பெண்டசோல் 1 மாத்திரை (400அப) 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு (கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பெண்டசோல் 1 மாத்திரை (400அப) மொத்த பயனாளிகள் குழந்தைகள் – 776455 பெண்கள் – 267105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1379 பள்ளிகளிலும், 453 தனியார் பள்ளிகளிலும், 81 கல்லூரிகளிலும், 1758அங்கன்வாடி மையங்களிலும் மொத்தம் 3671 மையங்களில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தமாக 4322 பணியாளர்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுப்பட்ட குழந்தைகளுக்கு 18.08.2025 அன்று அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. எனவே அனைவரும் இந்த குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.இதில் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) மோகனா மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.