மரச் செடிகளை வளர்க்க வனத்துறையுடன் இணைந்து சிறப்பாக நாற்றங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :

பதிவு:2025-08-13 11:51:49



மரச் செடிகளை வளர்க்க வனத்துறையுடன் இணைந்து சிறப்பாக நாற்றங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :

மரச் செடிகளை வளர்க்க வனத்துறையுடன் இணைந்து சிறப்பாக நாற்றங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.

அப்போது, இந்த மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், ஒவ்வொரு ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பழங்குடியினர் குடியிருப்புகள், சாலை, தெருச்சாலை உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், வனத்துறையுடன் இணைந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ஒன்றியங்களில் பல்வேறு வகையான மரச் செடிகள் வளர்த்து ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்தல், சிறப்பான பணிகளை மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார துணை அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், உதவிப் பொறியாளர்கள் என 18 பேரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜவேலு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.