பதிவு:2022-06-15 16:04:49
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு பற்றி வாட்ஸ்அப் செயலி மூலம் வரும் தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் .
திருவள்ளூர் ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தவறான செய்தி பரவி வருவதால் பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
வாட்ஸ்அப் செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு எனவும், சம்பளம் முறையே 15,000 மற்றும் 18,000 எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் என தவறான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும், பொய்யான செய்தியை பயன்படுத்த வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.