திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய இயந்திரங்கள், கருவிகள் வாடகையில் பெற விவசாயிகள் இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்

பதிவு:2022-06-15 16:06:42



திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய இயந்திரங்கள், கருவிகள் வாடகையில் பெற விவசாயிகள் இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய இயந்திரங்கள், கருவிகள் வாடகையில் பெற விவசாயிகள் இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்

திருவள்ளூர் ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும், விவசாய இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை வாடகையில் பெற இ-வாடகை மூல் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது-

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மண் தள்ளும் இயந்திரம், 10 உழுவை இயந்திரங்கள், 2 சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் போன்றவை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மண் தள்ளும் இயந்திரம் - ரூ. 970 (ஒரு மணி நேரத்திற்கு டீசலுடன் சேர்த்து)உழுவை இயந்திரம் - ரூ. 400 (ஒரு மணி நேரத்திற்கு டீசலுடன் சேர்த்து) சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் - ரூ.760 (ஒரு மணி நேரத்திற்கு டீசலுடன் சேர்த்து)மேலும் சுழல் கலப்பை,9 கொத்து கலப்பை,5 கொத்து கலப்பை,வரப்பு அமைக்கும் கருவி, துகளாக்கும் கருவி, குழி எடுக்கும் கருவி, வைக்கோல் பிரித்தெடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி,கரும்பு நடவு இயந்திரம்,வட்டு கலப்பை,இறக்கை கலப்பை,உளி கலப்பை, பலவகை தானியம் கதிரடிக்கும் இயந்திரம்,குழிதோண்டும் கருவி ஆகியவை டிராக்டருடன் இணைத்து வாடகைக்கு வழங்கப்படுகிறது

ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாய இயந்திரங்கள் ஃ கருவிகள் வாடகையில் பெற உழவன் செயலியில் வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்கள் வாடகைக்கு என்ற தேர்வில் இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.விவரங்களுக்கு, உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) திருவள்ளுர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) திருத்தணி, உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) பொன்னேரி ஆகிய அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.