பதிவு:2022-07-06 14:35:19
திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதிமாதம் ஒருகிராமம் என நடத்தப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் வருகின்ற 09.07.2022 தேதி திருவள்ளூர் வட்டம், செய்யம்பாக்கம் நியாய விலைக்கடை அருகில்,ஊத்துக்கோட்டை வட்டம், பாளவாக்கம் ஜே.ஜே.நகர் (இருளர் பகுதி) நியாய விலைக் கடை அருகில்,பூந்தமல்லி வட்டம்,குத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,திருத்தணி வட்டம், தாடூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,பள்ளிப்பட்டு வட்டம், அத்திமாஞ்சேரி நியாய விலைகடை அருகில்பொன்னேரி வட்டம், பண்டிகாவனுர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,கும்மிடிப்பூண்டி வட்டம், மாநெல்லுர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,ஆவடி வட்டம்,கொசவம்பாளையம் திருநின்றவூர் பி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,ஆர்.கே.பேட்டை வட்டம், மகான்காலிகாபுரம் நியாய விலைக்கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்திட தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களும் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்துமாறு,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.