பதிவு:2022-07-07 20:50:43
அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 20-ந் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூலை 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூரில் வருகிற 20.07.2022 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 20.07.2022 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள வாயிலாக நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும், +2 தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சி அளிக்கப்படும்
பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ..750 -ம் இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை போன்றவை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 எண்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
இங்கு கம்மியர் கருவிகள் தொழிற் பிரிவுக்கு 2 வருடம் பயிற்சிகாலம் என்றும், அதற்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கோபா தொழிற் பிரிவுக்கு 1 வருடம் பயிற்சி காலம் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.செயலகப் பயிற்சி தொழிற் பிரிவுக்கு 1 வருடம் பயிற்சிகாலம் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டிடப்பட வரைவாளர் தொழிற் பிரிவுக்கு 2 வருடம் பயிற்சி காலம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. தையல் தொழில் நுட்பம் தொழிற் பிரிவுக்கு 1 வருடம் பயிற்சி காலம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.