திருவள்ளூரில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :

பதிவு:2022-07-15 15:38:13



திருவள்ளூரில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூரில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜூலை 15 : 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லப்புரத்தில் 28 ஜீன் முதல் 10 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தலைமை செயலாளர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை முதன்மை செயலாளர் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் பற்றிய விழிப்புணர்வு 30 நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அறிவுறை வழங்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இது நம்ம சென்னை நம்ம செஸ் என்ற பெயரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் திரும்பி மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 5 கி. மீட்டர் தூரத்திற்கு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒலிம்பியாட் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் இந்த ஒலிம்பியாட் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் ஏபிஎஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவன் எஸ்.வருண் முதலிடத்தையும், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் கே.தினேஷ்குமார் 2-ம் இடத்தையும், பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜெ.ஹரிஹரன் 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

அதே போல் பெண்கள் பிரிவில் எம்ஜிஆர் யூனிவர்சிட்டி மாணவி கே.எம்.காயத்திரி முதல் இடத்தையும், கிரைஸ்ட் கிங்க் பள்ளி மாணவி மதுஸ்ரீ 2- ம் இடத்தையும், சவீதா யூனிவர்சிட்டி மாணவி சஞ்சனாஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

இந்த ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் பிரச்சார் இன்டர்நெட் எத்திராஜ்,ஸ்போர்ட்ஸ் அகாடமி தீபன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.