பதிவு:2022-07-18 21:31:26
திருவள்ளூர் அடுத்த சென்னாவரம் கிராமத்தில் 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 ஏக்கர் நிலம் அதிரடி மீட்பு
திருவள்ளூர் ஜூலை 18 : தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் ஆக்கிரமிப்புகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அறிவுரையின் படி அகற்றி பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு வருகின்றனர்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் சென்னாவரம் ஊராட்சியில் புல எண்.54/1 பொதுப்பணித்துறை சொந்தமான ஏரியில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ94 லட்சம் ரூபாய் மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் வெங்கத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர், கடம்பத்தூர் வருவாய் ஆய்வாளர் கவிதா,, பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் சுனில் கிராம நிர்வாக அலுவலர் உஷா, ஆகியோர் ரூ.94 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
மேலும் இது அரசுக்கு சொந்தமான இடம். இங்கு யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர்.