பங்காரம்பேட்டை ஊராட்சியில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 23 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3.91 லட்சம் மதிப்பிலான மீன்பிடி படகுகள்

பதிவு:2022-07-23 13:17:29



பங்காரம்பேட்டை ஊராட்சியில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 23 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3.91 லட்சம் மதிப்பிலான மீன்பிடி படகுகள்

பங்காரம்பேட்டை ஊராட்சியில் ஐ.ஆர்.சி.டி.எஸ்  தொண்டு நிறுவனம் சார்பில் 23 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3.91 லட்சம் மதிப்பிலான மீன்பிடி படகுகள்

திருவள்ளூர் ஜூலை 23 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம் பங்காரம்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் DIZ என்ற நிறுவனம் சார்பாக கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த மீனவர் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 23 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.3.91 லட்சம் மதிப்பீட்டிலான மீன்பிடி படகுகளை மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.

ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், இந்தோ ஜெர்மன் ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பங்காரம்பேட்டை கிராமத்தில் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த மீனவர் பெருங்குடி மக்களுக்கு 23 மீன்பிடி படகுகளை திருப்பேர் ஊராட்சிக்குட்பட்ட பங்காரம்பேட்டை கிராமத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் மீன்பிடி படகுகளை பயன்படுத்தி கோவிட் பெருந்தொற்றினால் தந்தையை இழந்த குடும்பங்கள், இருளர் இன குடும்பங்கள், மாற்றுத்திறனாளி குடும்பங்கள், அதிக பெண் குழந்தைகள் வசிக்கின்ற குடும்பங்கள் உள்ளிட்ட 23 நலிவடைந்த குடும்பங்கள் தங்கள் குடும்ப வருவாயை உயர்த்தி கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் இப்பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குடும்ப வருமானம் கூடுவதினால் குழந்தைகளின் உயர்கல்வியை உறுதிப்படுத்துவதன் மூலமாக குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமண முறையை ஒழிக்க ஏதுவாக அமையும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இன்று ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் DIZ என்ற நிறுவனத்தின் மூலம் 23 மீன்பிடி படகுகளை 23 பயனாளிகளுக்கு வழங்கி, இத்திட்டத்தை சிறப்பாக முறையில் செயல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் 23 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த 23 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருந்தும், தொண்டு நிறுவனங்களின் பங்கும் தேவையானதாக இருக்கிறது.அதனை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கக்கூடிய ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் DIZ என்ற நிறுவனத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா,துணைத் தலைவர் மகாலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் விஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பொற்செல்வி, மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோதிலால்,ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ஜோதி, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் பி.ஸ்டீபன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.