திருத்தணியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்ததலால் திருத்தணி விழாக் கோலம் பூண்டுள்ளது

பதிவு:2022-07-23 13:20:09



திருத்தணியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்ததலால் திருத்தணி விழாக் கோலம் பூண்டுள்ளது

திருத்தணியில்  ஆடி கிருத்திகையை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்ததலால் திருத்தணி விழாக் கோலம் பூண்டுள்ளது

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணிகை முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. ஆடிபரணி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று தங்க கவசம், வைரக்கல் முத்து. மரகத மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று ஆடிக் கிருத்திகையான இன்று முருகனை தரிசிக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என வகை வகையான காவவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காவடிகளுடன் பக்தர்கள் திருத்தணிக்கு வந்துக் கொண்டிருப்பதால், நகரில் காவடிகள் ஓசை கலை கட்டியது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் கூடுதலாக 3 மின்சார ரயில் இயக்க உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு 600 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், அதிக அளவில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ.பெ கல்யாண் தலைமையில் 1665 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் திருத்தணி மலையில் குவிந்து வருகின்றனர். நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் மொட்டையடித்து சரவணபொய்கை, நல்லாங்குளம் ஆகிய திருக்குளங்களில் நீராடி கோயில் படிகள் மற்றும் மலைப் பாதை வழியாக மலைக் கோயில் வந்தடைனர். பின்னர் பலமணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு காவடிகள் செலுத்தினர்.

பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகரில் பேருந்துகள், லாரிகள். ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காட்டும் நவீன காமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 7094400102, 7094400103, 7094400108 என்ற எண்களில் பக்தர்கள் புகார் அளிக்கலாம் என அறநிலையத்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.