திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை பொதுமக்கள் சாலை மறியல்

பதிவு:2022-07-25 11:26:34



திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசானம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா.(17). சரளா திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை இறைவணக்கம் முடிந்ததும் தனது அறைக்கு சென்றவர் விடுதி அறையில் மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் மப்பேடு போலீசார் சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் யாரையும் விடுதிக்குள் அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்காமல் பூட்டு போட்டு பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் எந்த தகவலும் பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை சம்பவத்தையடுத்து திருவள்ளூர் எஸ்பி பெகர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோர் பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 மாணவி விடுத்தியில் தங்கியிருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் கீழச்சேரி பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. பதற்றத்தை தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பிரேதப் பரிசோதனைக்காக மாணவி உடல் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுப்பி வைத்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.