ஆவடி மாநகராட்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கான தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து கலந்து கொண்டார்

பதிவு:2022-07-28 09:19:25



ஆவடி மாநகராட்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கான தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து கலந்து கொண்டார்

ஆவடி மாநகராட்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கான தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து கலந்து கொண்டார்

திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கான தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் துவக்கி வைத்து, அப்பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தப்பட்டது.இந்த 44-வது செஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஏறக்குறைய ரூ.100 கோடியை அந்த ஒலிம்பியாட் போட்டிக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.இப்போட்டியில் ஏறக்குறைய 188 நாடுகள் பங்கு பெறவுள்ளனர்.

இந்த சதுரங்க விளையாட்டு மிகவும் பழமையானதாகும். அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே குறிப்பாக ஏறக்குறைய 6000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சதுரங்க போட்டி நம் இந்தியாவில் இருந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்களம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தில் சதுரங்க வல்லநாதர் கோயில் 1500 ஆண்டுகளுக்கு பழமையானது. அந்த கோயில் மூலவர் சதுரங்க வல்லநாதர் அவருடைய பேரில் தான் இந்த செஸ் இன்றைய தினம் விளம்பரம்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறுவது தொடர்பாக பொதுமக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தயாரிக்கப்பட்ட ராட்சத பலூனை பால்வளத்துறை அமைச்சர்,மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பறக்கவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், இந்த செஸ் ஒலிம்பியாட் தீபம் கோயம்புத்தூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து அமைச்சர் விளையாட்டு வீரர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட “நம்ம செஸ் நம்ம பெருமை” என்ற அடையாள சிற்பத்தை திறந்து வைத்து, புகைப்படம் மற்றும் இப்போட்டி குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் செஸ் நினைவுச் சின்னத்துடன் அமைக்கப்பட்ட செல்ஃபி அரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வுகளில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரி, சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி, ஆவடி மாநகராட்சி துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மண்டல குழுத் தலைவர்கள் ராஜேந்திரன், அம்மு விஜயன், அமுதா பேபி சேகர், ஜோதி லட்சுமி நாராயண பிரசாத், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.