பதிவு:2022-07-28 13:43:09
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர் :
திருவள்ளூர் ஜூலை 28 : திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் அமாவாசை தினத்தன்று பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது உண்டு. அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிக அளவில் வழிபடுவது வழக்கம்.
இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவர் கோயில் அருகில் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
நோய்கள் தீர்க்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரராகவப் பெருமாளை வழிபட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதே நேரத்தில் உறவினர்கள் இறந்திருந்தால், இந்த வீரராகவர் கோவிலில் இரவு தங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் இங்கு இரவு நேரங்களில் கோயில் அருகே தங்கியும், வீரராகவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.