வாடகை பணம் செலுத்தாத 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு : முன் அறிவிப்பின்றி கடைக்கு சீல் வைக்க வந்தததை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் :

பதிவு:2022-07-31 15:42:40



வாடகை பணம் செலுத்தாத 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு : முன் அறிவிப்பின்றி கடைக்கு சீல் வைக்க வந்தததை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் :

வாடகை பணம் செலுத்தாத 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு : முன் அறிவிப்பின்றி கடைக்கு சீல் வைக்க வந்தததை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் :

திருவள்ளூர் ஜூலை 31 : போரூரில் ராமநாதீஸ்ரர் கோவில் உள்ளது இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடையின் உரிமையாளர்கள் சரி வர வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் முன்னறிவிப்பு நோட்டீஸ் எதுவும் ஒட்டாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீரென கடைகளுக்கு சீல் வைக்க வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் முற்றியதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர்கள் திடீரென போரூர் - குன்றத்தூர் சாலையில் அமர்ந்து கொண்டும், சாலையில் படுத்து கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் முன்னறிவிப்பின்றி வாடகை பணம் செலுத்தாத 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.