மத்திய அரசின் அரிசிக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதி்ப்பால் ஏழை எளிய மக்கள் சில்லறையில் அரிசி வாங்க முடியாத நிலை : அடுத்த 2-வது தலைமுறையில் அரிசி காணாமல் போகும் அபாயம்

பதிவு:2022-08-03 15:43:22



மத்திய அரசின் அரிசிக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதி்ப்பால் ஏழை எளிய மக்கள் சில்லறையில் அரிசி வாங்க முடியாத நிலை : அடுத்த 2-வது தலைமுறையில் அரிசி காணாமல் போகும் அபாயம்

மத்திய அரசின் அரிசிக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதி்ப்பால் ஏழை எளிய மக்கள் சில்லறையில் அரிசி வாங்க முடியாத நிலை : அடுத்த 2-வது தலைமுறையில் அரிசி காணாமல் போகும் அபாயம்

திருவள்ளூர் ஆக 04 : மத்திய மாநில அரசுகள் ஆடம்பர பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், பொன் நகை உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிதிக்கும் போது அது ஏழை எளிய மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இது வரை உணவுப் பொருட்களுக்கு வரி விதித்தது கிடையாது.டிரேட் மார்க் என்று சொல்லக்கூடிய இண்டியா கேட் உள்ளிட்ட உயர் ரக அரிசி ரகங்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலில் பிராண்டட் அரிசி, பிராண்டட் அல்லாத அரசி ரகங்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உத்தரவி பிறிப்பிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டத்தால் ஒரு கிலோவிலிருந்து 25 கிலோ வரை வாங்கும் அரிசிக்கு 5 சதவிகித வரி செலுத்தியே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதில் 25 கிலோவுக்கு மேல் அரிசி வாங்கும் போது ஜிஎஸ்டி வரி கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் தெளிவான முடிவு இல்லாமல் இருக்கிறது. இந்த 5 சதவிகித ஜிஎஸ்டியால் விலைவாசி உயர்வு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த காலங்களில் சிறு விவசாயிகள் குறைந்த அளவே நெல்லை உற்பத்தி செய்து 10 மூட்டை, 20 மூட்டை என 100 மூட்டை வரை அரிசி ஆலைக்கு கொண்டு வந்து அதனை அரிசியாக்கி எளிதில் விற்பனை செய்து விடுவதுண்டு. ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறு விவசாயிகள் அரிசி ஆலைக்கு கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் கே.ஜி.கந்தசாமியிடம் கேட்டதற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி என்பது இல்லாமல் இருந்த நிலையில் மத்திய அரசின் இந்த 5 சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பால் 1 கிலோ, 5 கிலோ, 10 கிலோ என சில்லரை விற்பனையில் அரிசியை ஏழை எளிய மக்கள் வாங்கி முடியாத நிலை உருவாகும் என்றார்.மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்துமே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நிலை தற்போது உள்ளது. அதே போல் அரிசியும் மூட்டைகளில் அடைத்தே பெரும்பாலான வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 25 கிலோ வரை சில்லறையில் அரிசி வாங்கும் போது அதற்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் 25 கிலோவுக்கு மேல் ஜிஎஸ்டி வரி கிடையாது என்பதால் கூடுதலாக ஒரு கிலோ அரிசியை வைத்து 26 கிலோவாக மூட்டை கட்டும் பணியில் ரைஸ் மில் உரிமையாளற்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 200 அரிசி ஆலை இயங்கி வந்த நிலையில் தற்போது 50 அரிசி ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. அதிலும் திருவள்ளூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் 10 முதல் 12 வரை மட்டுமே அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்கள் சன்னமான அரிசி வகைகளையே தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்திற்கு தேவையான நெல் வகைகளை ஆந்திரா மற்றும், கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வாங்கி அதனை தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் வரை நெல்லை கொள்முதல் செய்து அதனை வியாபாரிகள் பெற்று அரிசி ஆலைகளில் அரிசியாக்கி அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான நெல்லுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். தமிழக அரசு தற்போது மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது என்றும் பழைய மின் கட்டணத்தை செயல்படுத்திட வேண்டும் என்றும் ரைஸ் மில் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.