திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 13 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-08-11 22:29:54



திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 13 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 13 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் ஆக 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதி மாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி வருகின்ற 13.08.2022 தேதி திருவள்ளூர் வட்டம்,முருக்கஞ்சேரி கிராம நியாய விலைக்கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம்,கூனிப்பாளையம் கிராம இருளர் பகுதியிலும், பூந்தமல்லி வட்டம், காவல்சேரி கிராம நியாய விலைக்கடை அருகிலும்,திருத்தணி வட்டம்,கோரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,பள்ளிப்பட்டு வட்டம்,வடகுப்பம் நியாய விலைக்கடை அருகிலும், பொன்னேரி வட்டம்,அரியம்பாக்கம் கிராம நியாய விலைக்கடை அருகிலும்,கும்மிடிப்பூண்டி வட்டம்,புதுப்பாளையம் கிராம நியாய விலைக்கடை அருகிலும்,ஆவடி வட்டம்,கருணாகரஞ்சேரி கிராம நியாய விலைக்கடை அருகிலும்,ஆர்.கே.பேட்டை வட்டம்,வி.பி.ஆர்.புரம் நியாய விலைக்கடை அருகிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறும்,மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.