மீஞ்சூர் அருகே கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையை ஊரின் பொது இடத்திலோ அல்லது பௌத்தர்களிடம் ஒப்படைக்க பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

பதிவு:2022-08-12 13:20:17



மீஞ்சூர் அருகே கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையை ஊரின் பொது இடத்திலோ அல்லது பௌத்தர்களிடம் ஒப்படைக்க பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

மீஞ்சூர் அருகே கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையை ஊரின் பொது இடத்திலோ அல்லது பௌத்தர்களிடம் ஒப்படைக்க பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளகுளம் குமர சிறுலபாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழமையானதால் அரசு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.மீண்டும் அதே பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக பொக்லைன் இந்தியா மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது அப்போது பழங்கால பகவான் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கொடுத்த தகவலின் பெயரில் இந்த புத்தர் சிலை பொன்னேரி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்ட பள்ளி வளாகத்திலோ அல்லது ஊர் பொது இடத்தில் உள்ள அரச மரத்தடியிலேயோ நிறுவ வேண்டும் என்றும் இல்லையேல் பௌத்த பண்பாட்டை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அந்த கிராமத்தில் உள்ள பௌத்தர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்த புத்தர் சிலையை தொல்லியல் துறையில் ஒப்படைக்க கூடாது என்றும் அவ்வாறு ஒப்படைக்கும் பட்சத்தில் பௌத்தர்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கும் எனவும் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் பௌத்த சின்னங்கள் வாய்ப்புள்ளதால் அகழாய்வு செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதித்தமிழர் விடுதலை இயக்க மாநில நிதி செயலாளர் தோழர் இளஞ்செழியன் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்க பேரவையின் சார்பில் சங்க பரிபாலன மகா செயலாளர் அறவணடிகள் புத்தபிரகாசம், காஞ்சிபுரம் மாவட்ட சிறுபான்மை பிரிவு உறுப்பினரும் காஞ்சிபுரம் புத்த விகார் தலைவர் திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட சிறுபான்மைபிரிவு உறுப்பினர் பாண்டிச்சேரி மங்கலம் புத்த விகார் தலைவர் வழக்கறிஞர் போதிசந்திரன், அரக்கோணம் பௌத்த இயக்க அறக்கட்டளை தலைவர் பல்லூர் புத்தவிகார் நிர்வாகி கோ. வி. பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநிலச் செயலாளருமான நீலவானத்துநிலவு சந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தளபதி சுந்தர், பெரம்பூர் தென்னிந்திய புத்த விகார் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் பகுஜன்பிரேம், மாவட்ட பொருளாளர் பூவை எம் ஜெய்பீம்செல்வம், தொகுதி தலைவர் வழக்கறிஞர் சேலை எஸ் சுரேஷ், வழக்கறிஞர் கொப்பூர் விவேக், தலித் மக்கள் முன்னணி தலைவரும் திருத்தணி புத்த விகார் நிர்வாகி வழக்கறிஞர் திருநாவுக்கரசு, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திருவள்ளூர் நகர தலைவர் பூங்கத்தூர் டீ தேவா, தேவதானம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி எட்டியப்பன், விடுதலை சிறுத்தை கட்சியின் பூண்டி ஒன்றிய செயலாளர் பூண்டி வே ராஜா, பகுஜன் சமாஜ் கட்சி திருவலாங்காடு ஒன்றிய துணைத்தலைவர் கோட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்க நிர்வாகிகள் சே அருள்தாஸ், இளஞ்செழியன், ஜெயமோகன், யாபேஸ், தலித் மக்கள் முன்னணி நிர்வாகிகள் காப்ரியல் சத்தியா மற்றும் மாவட்டத்தில் அடங்கிய பெரும்பாலான பௌத்த சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்

இவற்றை திருவள்ளூர் மாவட்ட பௌத்த சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் பிஞ்சிவாக்கம் நாளந்தா புத்த விகாரின் தலைவருமான அம்பேத்ஆனந்த் ஒருங்கிணைத்திருந்தார்.