பூண்டி ஊராட்சியில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 1232 வீட்டிற்கும் தேசியக் கொடி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார் :

பதிவு:2022-08-13 23:58:56



பூண்டி ஊராட்சியில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 1232 வீட்டிற்கும் தேசியக் கொடி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார் :

பூண்டி ஊராட்சியில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 1232 வீட்டிற்கும் தேசியக் கொடி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 13 : 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம் தோறு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசின் அறிவித்தது. அதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி கிராம ஊராட்சியில் தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார்.

பூண்டி ஊராட்சியில் உள்ள பூண்டி, ரங்காபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 1232 வீடுகள், கடைகளுக்கு நேரில் சென்று தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார். மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி அவர்களுக்கும் தேசியக் கொடியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் சுகன்யா, ஊராட்சி செயலாளர் துரை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுந்தரி சிவா, ஊர் பெரியவர் பொன்னுசாமி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதவல்லி மற்றும் பள்ளிதலைமை ஆசிரியை பிரேமா, உதவி தலைமை ஆசிரியை பாப்பு ஆகியோர் கலந்து கொண்டு தேசியக் கொடியை வழங்கினர்.