பதிவு:2022-08-25 12:09:09
திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் :
திருவள்ளூர் ஆக 25 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே.பிரீத் உத்தரவின் பேரில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு கும்பல் 23 மூட்டை ரேசன் அரிசியுடன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து அங்கிருந்த 23 மூட்டையில் இருந்த 600 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்கள் யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த ரேசன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.