திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் . இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது

பதிவு:2022-08-27 14:27:20



திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் . இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது

திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் . இவரது மனைவி சிவசக்தி.  இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.  ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது

திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் . இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து எரையூர் கிராமத்தில் உள்ள தர்காவில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து நேற்று சண்மும்க அவரது மனைவி சசிகலா ஆகிய இருவரும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எரையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர்.

அப்போது அதே ஆட்டோவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஏறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தானும் எரையூர் செல்வதாக கூறி ஆட்டோவில் பயணித்தவர் நட்பாக பழகியுள்ளார். அதனைத்தொடர்ந்து தர்காவில் இரவு நேரமானதால் அந்த 35 வயது பெண்மணி உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி என்ற பெண் உள்ளிட்ட நான்கைந்து பேர் மயக்கமடைந்துள்ளனர்.

அப்போது சிவசக்தி என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை அந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் திருடிச் சென்றுள்ளார். அதே போல் மேலும் ஒரு சிலர் மயக்கமடைந்துள்ளனர். இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எரையூர் தர்காவிலும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த 3 பேர் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.