திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :

பதிவு:2022-08-31 04:04:34



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :

திருவள்ளூர் ஆக 30 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டு பேசினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலரின் அறிவுரைப்படியும், நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாகவுள்ள வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 3,657 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு முன்மொழிவுகள் அனுப்பி வைத்ததின்பேரில், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான வருவாய் கோட்ட அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலகங்களான வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தங்களது எழுத்துபூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களுக்கு இவ்வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியிட்ட 7 தினங்களுக்குள் அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) செல்வம், பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்