அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு : திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

பதிவு:2022-09-04 23:14:55



அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு : திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு : திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

திருவள்ளூர் செப் 04 : அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும்,திருவள்ளூர் மேற்கு மாவட்டஅதிமுக செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூர் நகரம் மற்றும் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், தேரடி, பஜார் வீதி, எம்ஜிஆர் சிலை, சிவி.என்.சாலை, ஆயில் மில் ஆகிய பகுதிகளிலும், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணவாளநகர் பகுதியிலும் நிர்வாகிகள் வேல்முருகன், எழிலரசன், துக்காராம், நகர் மன்ற உறுப்பினர் சுமித்ரா வெங்கடேசன், ஜெயா நகர் குமரேசன், ராமதாஸ், தியாகு மற்றும் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், மாவட்ட அவைத்தலைவர் இன்பநாதன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் எஸ்.ஞானகுமார், அம்மா பேரவை ஜி.உமாபதி, கோட்டீஸ்வரன், ஆர்.ஆர்.சுரேஷ் மற்றும் கிளை செயலாளர்கள் மற்றும் பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன், பூண்டி ஒன்றிய கவுன்சிலர் விஜி உள்ளிட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள்கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.