பதிவு:2022-09-06 17:37:51
பேரம்பாக்கம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 232 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : திருவள்ளூர் எம்.எல்.ஏ.,வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்.
திருவள்ளூர் செப் 06 : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 232 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் டி.லட்சுமி, மற்றும் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், கடம்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் எம்.ரமேஷ், ஒன்றிய குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், பேரம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி சுயம்பு பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குலாபி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஆர்.சர்மிளா, எஸ்.கோமதி, கலா சேகர், சந்தோஷ் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 232 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார். அப்போது, திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதன்படி விலையில்லா மிதி வண்டி வழங்கும் திட்டத்தையும் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்.
விலையில்லா மிதிவண்டியை பெறும் மாணவ மாணவியர் நல்ல முறையில் பள்ளிக்கு வந்து நன்றாகப் படித்து உயர் பதவியில் அமர வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்படும் சிறு சிறு தோல்விகளை கண்டுகொள்ளாமல் தூக்கியெறிந்து தன்னம்பிக்கையோடு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்தார். படிப்பு ஒன்று தான் மாணவர்களாகிய தங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும். பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களை நாம் கவுரவிக்க வேண்டும். பெற்றோர்கள் சொல்வதை கேட்டு செயல்பட்டால் வெற்றி உங்களை தேடி வரும் என்றும் மாணவர்களிடம் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநிவ காங்கிரஸ் நிர்வாகி திவாகர், மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள் காமராஜ், மாணிக்கம், ஏகாம்பரம், தேவா, சக்திதாசன், கண்ணதாசன், ஜெகன், தமிழ்மொழி, சண்முகம், சதாசிவம், பிரபா, ஜெலால்,பேரம்பாக்கம் கிளை நிர்வாகிகள் துரை, பிலால், ஜானகிராமன்,வெங்கடேசன்,மோகன், மஸ்தான், பூபதி, பழனி, வி.சி.ரமேஷ் திவாகர், சுந்தரம்,களாம்பாக்கம் பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.